ETV Bharat / state

வனவிலங்குகளை வைத்து டிக்டாக் செய்த இளைஞர்கள் மீது வழக்கு!

author img

By

Published : Jun 24, 2020, 9:41 AM IST

வனவிலங்குகளை வைத்து டிக்டாக் செய்த இளைஞர்கள் மீது வழக்கு!
வனவிலங்குகளை வைத்து டிக்டாக் செய்த இளைஞர்கள் மீது வழக்கு!

சேலம்: வன விலங்குகளை வைத்து டிக்டாக் காணொலி தயாரித்து பதிவேற்றம்செய்த இரண்டு இளைஞர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தில் வசிக்கும் ராஜா மகன் கவிபாலா (25), அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் பிரகாஷ் (27) ஆகிய இருவரும் வீட்டு விலங்குகளை வைத்து டிக் டாக் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுவந்தனர்.

டிக்டாக்கில் வனவிலங்குகளைப் பயன்படுத்தி காணொலி பதிவிட, இருவரும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குச் சென்று சட்டவிரோதமாக டிக்டாக் செய்துள்ளனர். இதனையடுத்து இது குறித்து பொதுமக்கள் டேனிஸ்பேட்டை வனச்சரக அலுவலத்திற்க்கு தகவல் கொடுத்துள்ளனர்.

வனவிலங்குகளை வைத்து டிக்டாக் செய்த இளைஞர்கள் மீது வழக்கு!

இது குறித்து தகவலறிந்த வனச்சரக அலுவலர்கள், இருவரையும் பிடித்து வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து இருவருக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

இதையும் படிங்க...குற்றம் 03: உங்கள் அடையாளமும் திருடப்படலாம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.