ETV Bharat / state

அம்மாபேட்டையில் நோய்ப் பரப்பும் கழிவுநீர் கால்வாய்

author img

By

Published : Mar 20, 2021, 9:27 AM IST

அம்மாபேட்டையில் நோய் பரப்பும் கழிவுநீர் கால்வாய்
அம்மாபேட்டையில் நோய் பரப்பும் கழிவுநீர் கால்வாய்

சேலம்: அம்மாபேட்டை, நஞ்சம்பட்டி ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பால், தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வீடுகள் அடந்து காணப்படும் நஞ்சம்பட்டி பகுதி, சேலம் அம்மாபேட்டையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இங்கு, போதுமான கழிவறைகள் வசதி கிடையாது. வீடுகளையொட்டி காணப்படும் கழிவுநீர் கால்வாயிலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் துர்நாற்றம் வீசுகிறது.

இது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் ஜோதி கூறுகையில், "தண்ணீர், மின்சாரம், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் எங்கள் பகுதியில் இல்லை. தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் காய்ச்சல் போன்ற நோய் அச்சுறுத்தல் தொடர்கதையாகிவருகிறது.

அரசு சார்பில் சுத்தம்செய்யப்பட்டது, ஆனால் பிரச்சினை தொடர்கிறது. முறையாக வடிகால் அமைத்துத் தரும்படி கோரிக்கைவைத்தோம். இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என்றார்.

அம்மாபேட்டையில் நோய்ப் பரப்பும் கழிவுநீர் கால்வாய்

கழிவுநீரால் கவலைக்குள்ளாகும் மக்களின் நிலையை அரசு கருத்தில்கொண்டு, மாநகராட்சி மூலமாகச் சரிசெய்து தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:'இலையில் விசில், எருக்கம் பூ விளையாட்டு' - 90ஸ் கிட்ஸின் உணர்வுகளை தூண்டி விட்ட மன்சூர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.