ETV Bharat / state

எஸ் பி பாலசுப்பிரமணியம் மறைவு: மேடை இசை கலைஞர்கள் அஞ்சலி

author img

By

Published : Sep 25, 2020, 9:38 PM IST

மேடை இசை கலைஞர்கள் அஞ்சலி
மேடை இசை கலைஞர்கள் அஞ்சலி

சேலம்: பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் மறைவிற்கு மேடை இசை கலைஞர்கள் திரைப்பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று (செப்.25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பு உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களுக்கு பெருந்துயராக மாறியுள்ளது. இந்த நிலையில் அவரின் மறைவிற்கு பல்வேறு இசைக் கலைஞர்கள் தமிழ்நாடு முழுவதும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரங்கத்தில், மேடை இசை கலைஞர்கள் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக அவரின் பாடல்களை இடைவிடாமல் ஒரு மணி நேரம் பாடினர். அதனை தொடர்ந்து அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர்.

மேடை இசை கலைஞர்கள் அஞ்சலி
மேடை இசை கலைஞர்கள் அஞ்சலி

இதேபோல சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும், மேடை இசை கலைஞர்கள், எஸ் பி பி பாடல் விரும்பிகள், ரசிகர்கள் எனப் பல்வேறு தரப்பட்ட மக்களும் அவரின் திருவுருவப் படத்திற்கு அவரவர் வீடுகளில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: எஸ்.பி.பி. உடலுக்கு அரசு மரியாதை - முதலமைச்சர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.