பள்ளிக்குச்செல்ல விருப்பம் இல்லாததால் 8ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை

author img

By

Published : Sep 19, 2022, 4:33 PM IST

பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாததால் 8ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை

சேலத்தில் பள்ளிக்குச்செல்ல விருப்பம் இல்லாமல் 8ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அஸ்தம்பட்டி காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்

சேலம்: ஜான்சன்பேட்டையைச்சேர்ந்த 13 வயது சிறுவன் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் பெற்றோர்கள் அச்சிறுவனை சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று பள்ளிக்குச்செல்லவேண்டும் என்று பெற்றோர்கள் கூறியிருந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் அருகே உள்ள உறவினர் வீட்டிற்குச்சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். உடனே அருகில் இருந்த உறவினர்கள், பெற்றோர்கள் தகவல் தெரிவித்தனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

உடனே அஸ்தம்பட்டி காவல்துறையினர் விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாததால் 8ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை
பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாததால் 8ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை

மேலும் பள்ளியில் மாணவனுக்கு ஏதாவது பிரச்னை இருந்ததா அல்லது வேற ஏதாவது காரணங்கள் உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பெரியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமன விதி மீறல் - பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.