ETV Bharat / state

சேலத்தில் பாதுகாப்பு படைவீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

author img

By

Published : Dec 8, 2022, 12:09 PM IST

Etv Bharatசேலத்தில் பாதுகாப்பு  படைவீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
Etv Bharatசேலத்தில் பாதுகாப்பு படைவீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சேலம் உருக்காலை வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்: மத்திய அரசின் செயில் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் சேலம் உருக்காலையில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் சக்திவேல் என்பவர் பணியில் இருந்த பொழுது தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். இதனையடுத்து முதல் உதவிக்காக ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

தற்கொலை செய்து கொண்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் உடல் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட உள்ளது. மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து இரும்பாலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட சக்திவேல்-க்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் தேனியைச் சேர்ந்தவர் என்பதும் கடந்த சில நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்கொலை செய்து கொண்ட பாதுகாப்பு படை வீரர் சக்திவேல்
தற்கொலை செய்து கொண்ட பாதுகாப்பு படை வீரர் சக்திவேல்

இதையும் படிங்க:ஆட்டம்..! பாட்டம்.!! கொண்டாட்டம்!!! பள்ளிக் கல்வித்துறையின் கலைத் திருவிழா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.