ETV Bharat / state

டீசல் விலை உயர்வு : ஆழ்துளை கிணறு அமைப்போர் வேலை நிறுத்தம்!

author img

By

Published : Jan 25, 2021, 5:51 AM IST

ஆழ்துளை கிணறு அமைப்போர் வேலை நிறுத்தம்
ஆழ்துளை கிணறு அமைப்போர் வேலை நிறுத்தம்

டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், டீசல் விலையை ஜிஎஸ்டியில் சேர்க்க வலியுறுத்தியும் ரிக் லாரி தொழில் எனப்படும் ஆழ்துளை கிணறு அமைப்போர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சேலம்: சேலம் மாவட்டத்தில் ரிக் லாரி உரிமையாளர்கள் இன்று (ஜன.24) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில் ரிக் லாரிகளை நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இந்த போராட்டம் குறித்து அகில இந்திய ரிக் உரிமையாளர்கள் சங்க செயலாளர் சேது கூறுகையில், " சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரிக் லாரிகளை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் லாரிகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

டீசலுக்கு மட்டுமே 70 விழுக்காடு செலவாகி விடுவதால், மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். இதனால் மத்திய அரசு ரிக் லாரி தொழிலுக்கு டீசல் மானியம் வழங்க வேண்டும். டீசல் விலையை ஜிஎஸ்டியில் சேர்க்க வேண்டும். விவசாய தொழிலுக்கும், குடிநீர் தேவைக்கும் ஆள்துளை கிணறு அமைப்பதற்கு டீசல் விலையை குறைத்து வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

இதையும் படிங்க: மெரினாவில் குடியரசு தின இறுதி ஒத்திகை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.