ETV Bharat / state

60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பைக் - ஏற்காட்டில் பெண் உயிரிழப்பு!

author img

By

Published : Jan 14, 2021, 10:37 PM IST

சேலம்
சேலம்

சேலம்: ஏற்காடு மலை பாதையின் 60 அடி பள்ளத்தில் பைக் கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம், கொசவப்பட்டி பகுதியை சேர்ந்த பாபு (35) - சசிக்கலா (30) தம்பதி, இன்று காலை இருசக்கர வாகனத்தில் ஏற்காட்டிற்கு வந்துள்ளனர். பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு, மாலையில் நாமக்கல் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, 2ஆவது கொண்டை ஊசி வளைவில் வேகமாக பைக்கை திருப்பியபோது, நிலைதடுமாறி சாலையோர தடுப்பில் மோதி 60 அடி பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், சசிக்கலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த பாபு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், புதருக்குள் சிக்கியிருந்த சசிகலாவின் உடலை கயிற்றால் கட்டி மேலே எடுத்தனர். இதுகுறித்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.