நிதி ஆதாரத்திற்குத்தான் வரி - அமைச்சர் கே.என். நேரு விளக்கம்!

author img

By

Published : May 13, 2022, 6:35 PM IST

நிதியாதாரம் திரட்டுவதற்கு வரி போட்டால் வரி போடுவதாக குற்றம்சாட்டுகிறார்கள் - கே.என். நேரு

நிதி ஆதாரம் திரட்டுவதற்கு வரி போட்டால் வரி போடுவதாக குற்றம்சாட்டுகிறார்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்துள்ளார்.

சேலம் : நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, 'தமிழ்நாட்டிற்கு நிதி ஆதாரம் திரட்டவில்லை என எதிர்க்கட்சி குறைகூறிக் கொண்டே வருகிறது. நிதி ஆதாரம் திரட்டுவதற்கு வரி போட்டால் வரி போடுவதாக குற்றம்சாட்டுகிறார்கள்.இது குறித்து எதிர்க்கட்சி மாறி மாறி பேசி வருகிறது.

தமிழ்நாட்டில் நிதி மேலாண்மை சிறப்பாக உள்ளது.கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் தான் கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தினர். சேலம் ஏற்காடு கோடை விழா வருகிற 26ஆம் தேதி தொடங்கி 7 நாட்கள் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது’ எனப் பேசினார்.

இதையும் படிங்க : சொத்து வரி உயர்வு எதனால்? அமைச்சர் நேரு விளக்கம்!


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.