ETV Bharat / state

இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்ட அமைச்சர் !

author img

By

Published : May 18, 2021, 1:03 PM IST

அமைச்சர் காந்தி
Minister R Gandhi

வாலாஜா அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர் காந்தி, கரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸை செலுத்திக் கொண்டார்.

கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இ வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, படுக்கை வசதி்,ஆகியவற்றை ராணிப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் காந்தி நேற்று(மே. 17) ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து ரோட்டரி கிளப் சார்பில் வழங்கப்பட்ட 1.5 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை மருத்துவமனைக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சிகளை தொடர்ந்து இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசி அமைச்சர் காந்திக்கு செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க: அமோனியம் நைட்ரேட்டுடன் தடம் புரண்ட சரக்கு ரயில்; தீப்பிடித்து எரிந்த பெட்டிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.