ETV Bharat / state

சாலை விரிவாக்க பணிக்காக வீட்டை இடிக்கும் போது மேற்கூரை விழுந்து உரிமையாளர் பலி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 9:58 PM IST

Bengaluru-Chennai National Highway
ராணிப்பேட்டையில் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் உரிமையாளர் பலி..!

Bengaluru-Chennai National Highway: ராணிப்பேட்டை மாவட்டத்தில், நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக சாலை ஓரம் உள்ள வீட்டை இடிக்கும் போது மேற்கூரை இடிந்து விழுந்ததில் வீட்டின் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியைச் சேர்ந்தவர் தஷ்ணாமூர்த்தி(60). இவருக்கு பெங்களுரு - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக சொந்தமான வீடு உள்ளது. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதன் காரணமாக, வீட்டை இடித்து அதில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றை எடுப்பதற்காக, வீட்டின் உரிமையாளர் தஷ்ணாமூர்த்தி வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் மேற்கூரை இடிந்து தஷ்ணாமூர்த்தியின் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் உடனடியாக ரத்தினகிரி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரத்தினகிரி போலீசார் உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலி, கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஆகியோருக்கு அர்ஜுனா விருது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.