ராணிப்பேட்டையில் காதல் ஜோடி தற்கொலை

author img

By

Published : Jan 13, 2022, 12:25 PM IST

importance of mental health

பெற்றோர் காதலை ஏற்க மறுத்ததால், வேலூரில் காதலர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை: அம்மூரை அடுத்த வேலம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது 18 வயது மகள் சந்தியா அதே பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த கதிர்வேல் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திருமணம் செய்து கொள்ள கதிர்வேல், சந்தியாவின் பெற்றோர்களிடம் பேசியுள்ளார். ஆனால், அவர்களது காதலுக்கு சந்தியாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததோடு அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது.

பெற்றோர் காதல் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் விரக்தி அடைந்த சந்தியா தற்கொலை செய்துகொண்டார்.
இந்த செய்தியை கேட்ட சந்தியாவின் காதலனான கதிர்வேலும் தற்கொலை செய்துகொண்டார்.

importance of mental health
தற்கொலை எண்ணத்தை கைவிடுங்கள்

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை மற்றும் சோளிங்கர் காவல் துறையினர், இருவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: Suicide Prevention: அதிகரித்துவரும் தற்கொலைகளைத் தடுப்பது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.