திரையரங்கு மேலாளர் மீது தாக்குதல்; கேட் திறக்காததால் ரசிகர் வெறிச்செயல்

author img

By

Published : Jan 11, 2023, 12:18 PM IST

துணிவு திரைப்படம் வெளியான திரையரங்கு மேலாளர் மீது தாக்குதல்; கேட் திறக்காததால் ரசிகர் வெறிச்செயல்

துணிவு படம் வெளியான திரையரங்கில் கேட்டை திறக்க கூறி ரகளையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த சென்ற மேலாளர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துணிவு திரைப்படம் வெளியான திரையரங்கு மேலாளர் மீது தாக்குதல்

ராணிப்பேட்டை: நடிகர் அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் இன்று (ஜனவரி 11) வெளியானது. ஆற்காட்டில் உள்ள பிரபல லட்சுமி திரையரங்கத்தில் உள்ள இரு அரங்கிலும் துணிவு திரைப்படம் வெளியாகயிருந்த நிலையில் இரவு 10 மணி முதல் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

ஏராளமான ரசிகர்கள் திரையரங்கின் வெளியே காத்துக்கொண்டிருந்தனர். அப்போது மதுபோதையில் சிலர் திரையரங்கின் கதவை திறக்குமாறு கூறி ரகளையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற திரையரங்கின் மேலாளர் பிரபாகரன் என்பவர் மீது தாக்குதல் நடத்தியதோடு, நகத்தைக் கொண்டு அவரது கண்களை கீறியுள்ளனர்.

இதில் மேலாளர் காயமடைந்த நிலையில் திரையரங்க ஊழியர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு நகர போலீசார் திரையரங்கிற்கு வந்து ரகளையில் ஈடுபட்டவர்களை விரட்டினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: துணிவு பட கொண்டாட்டத்தின் போது அஜித் ரசிகர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.