நடத்தையில் சந்தேகம் - கணவன் தூங்கும் போது வெந்நீர் ஊற்றிய மனைவி

author img

By

Published : Aug 17, 2022, 10:42 AM IST

Updated : Aug 17, 2022, 12:04 PM IST

Etv Bharat

ராணிப்பேட்டையில் நடத்தையில் சந்தேகமடைந்த மணைவி, கணவன் தூங்கும் போது கொதிக்கும் வெந்நீரை உடல் மீது ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை: காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(32). இவருக்கு 7 ஆண்டுகள் முன் பிரியா என்பவருடன் திருமணமாகியது. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். தங்கராஜ் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் துப்புரவு மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

கடந்த சில நாட்களாக கணவனின் நடத்தையில் பிரியாவிற்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வேலை பார்க்கும் இடத்தில் வேறொரு பெண்ணுடன் நெருக்கம் இருப்பதாக சந்தேகமடைந்த பிரியாவிற்கும் அவரது கணவருக்குமிடையே ஒரு மாதமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கணவனை பழிவாங்க நினைத்த மனைவி பிரியா, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவன் மீது ஊற்றியுள்ளார்.

அப்போது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தங்கராஜை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி செய்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: காவடி தூக்கவா டெல்லி போகிறேன்...ஸ்டாலின்

Last Updated :Aug 17, 2022, 12:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.