ETV Bharat / state

விசிக கிளைச் செயலாளர் ஏரியிலிருந்து சடலமாக மீட்பு - போலீசார் தீவிர விசாரணை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2023, 11:22 AM IST

போலீஸ் விசாரணை
விசிக கிளை செயலாளர் ஏரியிலிருந்து சடலமாக மீட்பு

VCK Secretary dead at Sholingur: ராணிப்பேட்டை மாவட்டத்தில் விசிக கிளைச் செயலாளர் உயிரிழந்த நிலையில் ஏரியில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோம சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (40). இவருக்கு திருமணமாகி சித்ரா என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். முருகன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிளைச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற முருகன், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வள்ளியூரில் தங்க நகைக்கடையில் கொள்ளையடித்துச் சென்ற திருட்டு கும்பல் அதிரடி கைது..!

எனவே, முருகனின் குடும்பத்தினர் அவரை இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடி அலைந்துள்ளனர். இந்நிலையில் ஏரிக்கரை ஓரமாக அவரது செல்போன் மற்றும் செருப்பு இருப்பதாக சிலர் தகவல் கூறியுள்ளனர். இதனையடுத்து, இது குறித்து சோளிங்கர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோளிங்கர் தீயணைப்பு வீரர்கள், சுமார் 3 மணி நேரமாக ஏரிக்குள் தேடியுள்ளனர்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு முருகனின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், முருகன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்துள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆலாந்துறை அருகே காட்டுப்பன்றி வேட்டை.. நாட்டு வெடிகுண்டுடன் கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.