அரக்கோணத்தில் கொள்ளை சம்பவம்: பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி

author img

By

Published : Dec 18, 2021, 4:58 PM IST

அரக்கோணத்தில் கொள்ளை சம்பவம்

அரக்கோணத்தில் நள்ளிரவில் வீட்டிலிருந்தவர்களை தாக்கி 25 சவரன் தங்க நகை, ரூ. 60 ஆயிரம் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை: அரக்கோணத்தை அடுத்த கன்னிகாபுரம் கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் புஷ்கரன். ஆடிட்டரான இவர் அப்பகுதியில் மாந்தோப்புக்கு இடையே உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று (டிச 17) இரவு கொள்ளையர்கள் புஷ்கரன் வீட்டிற்குள் புகுந்து அனைவரையும் தாக்கி, வீட்டிலிருந்த 25 சவரன் நகை, ரூ. 60 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அரக்கோணத்தில் கொள்ளை சம்பவம்
அரக்கோணத்தில் கொள்ளை சம்பவம்

மருத்துவமனையில் அனுமதி

கொள்ளையர்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதில் புஷ்கரன் உள்ளிட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தற்போது மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அரக்கோணம் காவல் துறையினர், ல் விசாரணை மேற்கொண்டனர்.

அரக்கோணத்தில் கொள்ளை சம்பவம்
அரக்கோணத்தில் கொள்ளை சம்பவம்

முதற்கட்ட விசாரணையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் வீட்டை சுற்றிலும் மிளகாய் பொடி, பேஸ்ட், ஷாம்பு ஆகியவற்றை வீசி சென்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது‌. மேலும், கொள்ளையர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்கள் வட இந்திய கொள்ளையர்களா என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: வேலூர் நகைகடையில் கொள்ளை: சிசிடிவியி சிக்கிய கொள்ளையனின் புகைப்படம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.