ETV Bharat / state

குடும்பப் பிரச்னையால் 4 மாத குழந்தையுடன் பெண் தீக்குளித்து தற்கொலை

author img

By

Published : Nov 28, 2020, 6:15 PM IST

woman-commits-suicide-by-setting-fire-to-4-month-old-baby-due-to-family-problem
woman-commits-suicide-by-setting-fire-to-4-month-old-baby-due-to-family-problem

ராமநாதபுரம் : கமுதி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக நான்கு மாத குழந்தையுடன் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள மேலமுடிமன்னார் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்முருகன் (வயது 27). இவரது மனைவி குரு தேவி (வயது 20). இவர்களுக்கு மலை கீர்த்தனன் என்ற நான்கு மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே இன்று மனக்கசப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த குரு தேவி, தனது நான்கு மாதக் குழந்தையுடன் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்துள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இச்சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்த பொன்முருகன், யாருக்கும் தெரியாமல் அவர்களது உடல்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரிக்கத் திட்டமிட்டுள்ளார்.

ஆனால் அதற்கு முன்பாக காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கமுதி காவல் துறையினர், பொன்முருகன், அவரது உறவினர்கள் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : பெரம்பலூர் அருகே 400 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.