ETV Bharat / state

நாடார் உரிமைகளை மீட்டெடுக்க ஹெலிகாப்டரில் வந்திறங்கிய ஹரி நாடார்

author img

By

Published : Mar 29, 2021, 4:03 PM IST

we joined politics to restore rights said panagattu padai coordinator Hari Nadar
we joined politics to restore rights said panagattu padai coordinator Hari Nadar

ராமநாதபுரம்: நாடார் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவே அரசியலில் இணைந்துள்ளதாக பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் கருத்து தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமநாதபுரம், திருவாடானை ஆகிய தொகுதிகளில் பனங்காட்டு படை கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார், நிறுவனர் ராக்கெட் ராஜா ஆகியோர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினர்.

அப்போது செய்தியாளர்களிம் பேசிய பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார், "எங்கள் சமுதாயத்திற்கான உரிமைகளை மீட்டெடுப்பதற்காக அரசியலில் இணைந்ததோம். ராமநாதபுரத்தில், விவசாயத்திற்கு அடுத்தப்படியான பனை விவசாயத்தை நம்பியுள்ளோர் அதிகளவு உள்ளனர்.

நாடார் உரிமைகளை மீட்டெடுக்க களமிறங்கியுள்ளோம்

ஆனால், பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை பால் என்று சொல்லக்கூடிய பனை கள்ளை விற்பனை செய்வதற்கு தற்போது வரை அனுமதி மறுக்கும் அரசு, மதுபான கடைகளைத் திறந்து நடத்தி வருகிறது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த சமுதாயத்திற்கான அத்தியாவசிய நடவடிக்கைகள் அதிமுக, திமுக என இரு கட்சிகளும் முன்னெடுக்காத காரணத்தினால், எங்கள் சமுதாயத்தின் பண்பாடுகளை பனங்காட்டுப்படை சார்பாக மீட்டெடுக்க உள்ளோம்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.