ETV Bharat / state

தனுஷ்கோடி சென்று வர சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

author img

By

Published : Jul 17, 2021, 8:41 PM IST

Tourists allowed to visit Dhanushkodi
Tourists allowed to visit Dhanushkodi

மூன்று மாதத்திற்குப் பிறகு தனுஷ்கோடி சென்று வர சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

ராமநாதபுரம்: கரோனா இரண்டாம் அலை பரவலையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தளங்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. மேலும், தமிழ்நாடு அரசு கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்திருந்தாலும் தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல தடை தொடர்ந்தது.

தனுஷ்கோடி செல்லும் வழியில் காவல் துறையினர் பேரிகார்டுகள் அமைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் இன்று (ஜூலை 17) மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பில் மூன்று மாதங்களுக்குப் பின்னர் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பல்வேறு மாவட்ட, வெளி மாநிலத்திலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி சென்றுவருகின்றனர். நாளை (ஜூலை 18) காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் எனக் காவல் துறை தகவல் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: லாரியை துரத்திய நாய்.. லாரிக்குள் ஆடு... நண்பேண்டா..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.