ETV Bharat / state

இலங்கைக்குச் செல்ல முயன்ற மூன்று அகதிகள் கைது!

author img

By

Published : Mar 17, 2020, 9:09 PM IST

Three Sri Lankan refugees arrest in Rameswaram
Three Sri Lankan refugees arrest in Rameswaram

இராமநாதபுரம்: இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்ல முயன்ற மூன்று அகதிகளை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் கடல் பகுதியில் இருந்து மூன்று இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்குத் தப்பிச் செல்ல இருப்பதாக கடற்படைக்குத் தகவல் கிடைத்தது. இதன்அடிப்படையில், கடற்படையினர் கடல் பகுதியில் சோதனையிட்டனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக இருந்த மூன்று நபர்களை விசாரணை செய்தனர். விசாரணையில், தர்மபுரியைச் சேர்ந்த சுந்தரலிங்கம், கோவையைச் சேர்ந்த அருள் வசந்தன், சென்னையைச் சேர்ந்த மயூரன் என்பது தெரியவந்தது.

இலங்கைக்கு செல்ல முயன்ற மூன்று அகதிகள் கைது!

மேலும் இவர்கள் சட்ட விரோதமாக இலங்கைக்குச் செல்ல இங்கு வந்ததாகவும் கூறினர். இதனையடுத்து அவர்கள் மூவரையும் கடற்படையினர் கைது செய்து, கடற்கரை காவல் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பாஜகவில் ரஜினி - பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் ஆசை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.