ETV Bharat / state

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் ஓட்டுநர் கொடூர கொலை: மூவர் கைது!

author img

By

Published : Mar 6, 2021, 12:43 PM IST

Murder crime  ராமநாதபுரத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொடூர கொலை  ராமநாதபுரத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொலை  ஆட்டோ ஓட்டுநர் கொலை  ராமநாதபுரத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொடூர கொலை மூவர் கைது  Three arrested for brutal murder of auto driver in Ramanathapuram  Auto driver murder in Ramanathapuram  Auto driver murder
Auto driver murder in Ramanathapuram

ராமநாதபுரம்: மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஓட்டுநரை பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக கொலைசெய்த மூவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் வ.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் பனையடியான். இவர் சரக்கு வாகனம் ஓட்டிவந்தார். இதேபோல், பழைய ஆட்டோ, கார் வாங்கி கொடுக்கும் தரகராகவும் இருந்தார். இந்நிலையில், பனையடியான் புதிய பேருந்து நிலையம் - தேவிபட்டினம் சாலை அண்ணா சிலை அருகே நின்றுகொண்டிருந்தார்.

அப்போது, ஆட்டோ வாங்கி விற்பது தொடர்பான முன்விரோதத்தால் பனையடியானுக்கும், ஓட்டுநர் இருவருக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. மது போதையில் இருந்த ஓட்டுநர்கள் இருவரும் ஆத்திரமடைந்து அரிவாள், உருட்டுக்கட்டையால் பனையடியானை சரமாரியாகத் தாக்கினர்.

இதில் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அங்கிருந்தவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த கேணிக்கரை காவல் துறையினர் ஓட்டுநர்கள் அண்ணாமலை, ராஜேஷ், செந்தில் ஆகியோரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் ஆட்டோ ஓட்டுநர் கொலை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நேரில் வந்து உறவினர்கள், ஆட்டோ நிறுத்தும் இடத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்.

இதையும் படிங்க: திருப்பத்தூரில் அமமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.