ETV Bharat / state

மனைவியை கொலை செய்த கணவரை தேடும் காவல் துறை

author img

By

Published : Jun 22, 2021, 7:48 PM IST

மனைவியை கழுத்து அறுத்து கொன்ற கணவன்
மனைவியை கழுத்து அறுத்து கொன்ற கணவன்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த மனைவியைக் கொலைசெய்த கணவனை காவல் துறையினர் வழக்குப்பதிவுசெய்து தேடிவருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மல்லிகை நகர்ப் பகுதியில் வசித்துவருபவர் பவித்ரா (25). இவர் கணவர் தில்லை குமார் இளநீர் வியாபாரம் செய்துவருகிறார். இவர்களுக்கு ஐந்து வயதுடைய பெண் குழந்தை உள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரது மனைவியை காணவில்லை என கணவர் தில்லை ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சில நாள்களுக்கு பின்பு அவரது மனைவி, அதே பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் தீபன் என்னும் வாலிபருடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை வாக்குவாதம் நிலவிவந்த சூழலில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இருவீட்டார் முன்னிலையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, கணவனுடன் பவித்ராவை ஒன்று சேர்த்து வைத்துள்ளனர்.

கொலை செய்தவரை தேடும் காவல் துறை

இருப்பினும் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை சச்சரவு வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. இன்று (ஜூன் 22) காலை பவித்ரா தனது அம்மா வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்தபோது, குழந்தைக்கு முத்தம் கொடுப்பதுபோல மனைவி பவித்ராவை இளநீரை வெட்டுவதற்கு வைத்திருந்த அரிவாளை வைத்து கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, தில்லை தப்பியோடியுள்ளார்.

அக்கம்பக்கத்தினர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் ராமேஸ்வரம் நகர் காவல் துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த பவித்ராவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவுசெய்து மாயமான தில்லையை தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: 'சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.19 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.