ETV Bharat / state

மீனவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

author img

By

Published : Jan 2, 2021, 1:01 PM IST

rameswaram fishermen strike called off
rameswaram fishermen

இராமநாதபுரம்: இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பொற்று 17 நாள்களுக்குப் பின் 500க்கும் மேற்பட்ட படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இராமேஸ்வரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கடந்த மாதம் 40 மீனவர்களையும், ஆறு படகுகளையும் சிறைபிடித்தனர்.

இதைக் கண்டித்தும் பிடிக்கப்பட்ட படகுகளையும் மீனவர்களையும் விடுவிக்கக் கூறி இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 17 தினங்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தொடர் வேலை நிறுத்தம் காரணமாக கிறிஸ்மஸ், ஆங்கில புத்தாண்டை மீனவர்கள் கொண்டாட முடியாத காரணத்தினாலும் அதேபோல மீனவர்கள் படகுகளை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதாலும், வர உள்ள தைத்திருநாளை அனைவரும் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர் வேலை நிறுத்தத்தை கைவிட்டு இன்று (ஜன. 02) கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லப்போவதாக மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

மேலும் கூட்டத்தில் எக்காரணம் கொண்டும் படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் செல்ல கூடாது எனவும் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தக்கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதை மீறும் படகுகள் கண்டறியப்பட்டால் அந்தப் படகுகள் அனுமதிக்க மாட்டோம் எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இதனையடுத்து 500க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஒப்பந்தம் மார்ச்சில் கையெழுத்தாகலாம் - ஆர்டிஐ கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.