ETV Bharat / state

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: இருவர் மரணம்

author img

By

Published : Jul 17, 2021, 4:43 PM IST

ramanadhapuram accident issue
ramanadhapuram accident issue

உச்சிப்புளி அருகே லைசென்ஸ் (உரிமம்) எடுக்க ராமநாதபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்து ரமேஷ். இவரது மனைவி கஜேந்தினி தனது இருசக்கர வாகனத்திற்கு உரிமம் எடுக்க, ராமநாதபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலத்திற்கு இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த உறவினர் கருப்பசாமியுடன் இன்று (ஜூலை 17) காலை சென்றுள்ளார்.

ராமநாதபுரம் சென்று பணிகளை முடித்துவிட்டு, மீண்டும் ராமேஸ்வரம் திரும்பினர். அப்போது வரும் வழியில் வாலாந்தரவை அருகே கீரிப்பிள்ளை வலசையில் உள்ள பிரப்பன்வலசை பெட்ரோல் சேமிப்பு நிலையம் அருகே சென்றபோது ராமேஸ்வரத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற கார், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த கஜேந்தினி, காயங்களுடன் மீட்கப்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி இறந்தார். காரில் இருந்த ஆதிகேசவன் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து, உச்சிப்புளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: தர்மபுரி அருகே வயதான தம்பதி கொலையில் கல்லூரி மாணவர்கள் மூவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.