ETV Bharat / state

எலி மருந்து சாப்பிட்ட மாற்றுத்திறனாளி பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

author img

By

Published : Jan 29, 2021, 1:21 PM IST

எலி மருந்து சாப்பிட்ட மாற்றுத்திறனாளி பெண் சிகிச்சை பலனின்றி பலி
எலி மருந்து சாப்பிட்ட மாற்றுத்திறனாளி பெண் சிகிச்சை பலனின்றி பலி

ராமநாதபுரம்: குடும்ப பிரச்னை காரணமாக எலி மருந்து சாப்பிட்ட மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மேலக்கொடுமலூரைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மாற்றுத்திறனாளி பொன்னிருளு. இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி பொன்னிருளு எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏழு நாட்கள் சிகிச்சைக்குப்பின் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (ஜன. 27) பொன்னிருளு உயிரிழந்தார்.

இதுகுறித்து முருகேசன் மகன் காளிதாஸ் கொடுத்த புகாரின் பேரில் அபிராமம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க...சென்னையில் நகை திருட்டு: உரிமையாளருக்கு தெரிவதற்கு முன்பே திருடியவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.