ETV Bharat / state

திருவாடானையில் கருணாஸ் போட்டியில்லையாம்: காரணம் இதுதானா?

author img

By

Published : Jan 29, 2021, 3:24 PM IST

திருவாடானையில் கருணாஸ் போட்டியில்லையாம்..காரணம் இதுதானா?
திருவாடானையில் கருணாஸ் போட்டியில்லையாம்..காரணம் இதுதானா?

ராமநாதபுரம்: கடந்த இரண்டு ஆண்டுகளாக தொகுதி பக்கமே செல்லவில்லை என்பதால் மீண்டும் திருவாடானையில் போட்டியிட வாய்ப்பு இல்லை என கருணாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைhd பொதுத்தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பின் மூலம் நடிகர் கருணாஸ் அதிமுக கூட்டணியில் இணைந்து திருவாடானையில் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் அபார வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இல்லை என கருணாஸ் பேட்டியளித்துள்ளார்.

அதில், “கடந்த இரண்டு வருடங்களாக தொகுதி பக்கமே நான் செல்லவில்லை என்பதால் மீண்டும் நான் திருவாடானை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இல்லை" என்று அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

மேலும் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் எந்தக் கட்சியுடனும் தோழமையாக இருப்போம் என்று கருணாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட குழந்தை: பெயர் சூட்டிய ஆட்சியர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.