ETV Bharat / state

தனுஷ்கோடி கடற்கரைப் பகுதியில் ஒதுங்கிய சிவப்பு நிற மிதவை: பதற்றமடைந்த மக்கள்

author img

By

Published : May 17, 2021, 3:28 PM IST

சிவப்பு நிற மிதவை
சிவப்பு நிற மிதவை

தனுஷ்கோடி கடற்கரைப் பகுதியில் சிவப்பு நிற மிதவை ஒன்று ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி கடற்கரை இரட்டைத் தாழை எதிரேயுள்ள கடலில் 5 அடி நீளம், 3 அடி அகலம், 2 அடி உயரமுள்ள இரண்டு சிவப்பு நிற மிதவைப் பெட்டிகள் கரை ஒதுங்கின. இது குறித்து அப்பகுதியில் உள்ள மீனவர்கள் கடலோர காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் அதனை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது அது பெரிய கப்பல்களில் பயன்படுத்தப்படும் மிதவை. அது கப்பலில் இருந்து கழன்று வந்து இருக்கலாம்.

தற்போது அவை எப்படி இங்கு வந்தது என்பது குறித்து கடலோர காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: தலைநகரில் கரோனா தொற்றுப் பரவல் குறைந்து வருகிறது - மாநகராட்சி தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.