ETV Bharat / state

மன்னார் வளைகுடாவில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்!

author img

By

Published : Jul 22, 2021, 11:38 PM IST

100 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
100 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

வனத்துறையின் சார்பில் மன்னார் வளைகுடா தீவு பகுதியில் இருந்து 100 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இன்று அகற்றப்பட்டது.

ராமநாதபுரம் : ராமேஸ்வரம் அதனைச் சுற்றியுள்ள மன்னார் வளைகுடா உயிர்கோள பகுதியில் குருசடை மணலி உள்ளிட்ட 22 தீவுகள் உள்ளன. இந்த பகுதிகளில சுற்றுலாப் பயணிகளால் கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்டப் பொருள்கள் கரை ஒதுங்குவது வழக்கமாகியுள்ளது.

அதனை மண்டபம் வனத்துறையினர் அவ்வப்போது அகற்றி தூய்மை செய்வர். இந்நிலையில், இன்று(ஜூலை.22) மண்டபம் வனச்சரகர் வெங்கடேசன் தலைமையில்,வனக் காப்பாளர்,வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள் குருசடை தீவு பகுதியில் தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.

100 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
100 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

இன்று 100 கிலோ அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து தீவிலிருந்து அகற்றினர். மக்கள் கடல் பகுதிகளுக்கு சுற்றுலா வரும்போது கடல்வாழ் உயினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் போன்ற பொருள்களை கடலில் எறிய வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க:

'பாபா... பாபா...' - வேனின் பின்னே ஓடிய மக்களால் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.