ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்திருந்த ஒருவர், டிடிவி ஒழிக! என கோஷமிட்டு ஆபாசமான வார்த்தையால் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
அதைக் கேட்டு ஆத்திரமடைந்த அமமுக தொண்டர்கள், அந்த நபரை அடித்து உதைத்தனர். இதனையறிந்த போலீசார் அவரை பத்திரமாக மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: 'எதிர்மறை சிந்தனைகளை அகற்றி, புதிய சாதனைகள் புரிவோம்' - டிடிவி தினகரன் வாழ்த்து