ETV Bharat / state

உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு - விசாரணைக்கு சென்ற இடத்தில் நடந்த விபரீதம்

author img

By

Published : Oct 6, 2021, 10:53 PM IST

உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு
உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு

ராமநாதபுரத்தில் விசாரணைக்கு சென்ற உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டியவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ராமநாதபுரம்: ஆர்.எஸ். மங்கலம் அருகே அனிச்சகுடி கிராமத்தில் காளி அம்மன் கோயில் உள்ளது. இங்கு தரிசனத்திற்கு வருவோரிடம் ஒருவர் தகராறு செய்வதாக கோயில் நிர்வாகம் தரப்பில் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அனிச்சகுடியைச் சேர்ந்த மலைராஜ் என்பது தெரியவந்தது.

பின்னர், அவரைத் தேடி வீட்டிற்குச் சென்ற உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், காவலர் கண்ணன் ஆகியோர் மதுபோதையில் இருந்த மலைராஜை பிடிக்க முற்பட்டனர். ஆனால் மலைராஜ், உதவி ஆய்வாளரின் தலையில் அரிவாளால் வெட்டினார்.

உதவி ஆய்வாளரை தாக்கியவர் கைது

இதில் பலத்த காயமடைந்த அவரை காவலர் கண்ணன் மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உதவி ஆய்வாளரைத் தாக்கிய மலைராஜை ஆர்.எஸ். மங்கலம் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், சிகிச்சைப் பெற்று வரும் தமிழ்ச்செல்வனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையும் படிங்க: கோவையில் தற்கொலையை தடுக்க சிறப்பு ஆலோசனை மையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.