ETV Bharat / state

சாயல்குடி அருகே பூட்டிய வீடுகளில் 100 சவரன் நகை கொள்ளை!

author img

By

Published : Jul 18, 2019, 11:07 AM IST

சம்ப இடத்தில் விசாரணை மேற்கொள்ளும் போலீஸ்

ராமநாதபுரம்: சாயல்குடி அருகே பூட்டிய இரண்டு வீடுகளில் 110 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த அரியமூர்த்தி என்பவர், வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் சாயல்குடி இருவேலி பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினர் அனைவரும் நேற்று வெளியே சென்றனர். அதன்பின், வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிறகு உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 70பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

மேலும், சாயல்குடி விவிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஜெயசீலன் வீட்டிலும், 40 பவுன் நகை, 2 லட்சம் ரூபாம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்தும், சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இருதரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சாயல்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனகபாய் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

கொள்ளையடிக்கப்பட்ட வீடு

தகவலறிந்த கீழக்கரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகேசன் சம்பவ இடம் விரைந்து, கைரேகை நிபுணர்களுடன் விசாரணை மேற்கொண்டனர். சாயல்குடியில் இரண்டு வீடுகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Intro:இராமநாதபுரம்
ஜூலை.18
சாயல்குடியில் அருகே
இரு வீட்டின் பூட்டை உடைத்து
110 பவுன் நகை 2 லட்சம் ரொக்கப்பணம்                   கொள்ளை போலீசார் விசாரணைBody: இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள இலந்தைக்குளம் கிராமத்தை;சேர்ந்தவர் அரியமூர்த்தி இவருடைய மனைவி பைரவி இவர்கள் சாயல்குடி இருவேலி பகுதியில் வசித்து வருகிறார்.
அரியமூர்த்தி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் மனைவி மற்றும் குடும்பத்தினர் சாயல்குடியில் உள்ளனர். நேற்று வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்று இருந்தனர். திரும்பி வீடு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 70 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
மேலும் சாயல்குடி விவிஆர் நகர் பகுதியைச்சேர்ந்த ஆசிரியர் ஜெயசீலன் வீட்டில் 40 பவுன் நகையும் 2 லட்சம் ரொக்கப்பணமும் கொள்ளையடித்துள்ளனர்.
இது தொடர்பாகவும் சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
சாயல்குடி காவல் நிலையத்தில் இருதரப்பினர்கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் கனகபாய் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தகவல் அறிந்த கீழக்கரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகேசன் விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.
சாயல்குடி பகுதியில் நடைபெற்றுள்ள இத்திருட்டு சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.