புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே உள்ள ஓடப்பவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தம்பதி துரைராஜ், ஆனந்தி. இவர்களின் மகன் அஜித் ராஜ். இவர் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு மருத்துவம் படிப்பதற்காக உக்ரைனுக்குச் சென்றுள்ளார். தற்போது முதலாம் ஆண்டு அங்குப் படித்துவருகிறார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துவருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் அஜித் ராஜை மீட்டுத் தரக்கோரி பெற்றோர் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், தனது மகன் அங்கு சாப்பாடு இல்லாமல் சிக்கித் தவித்துவருவதாகவும், உயிருக்குப் பயந்து பதுங்குக் குழியில் அவரும், அவரது நண்பர்களும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: உக்ரைனிலிருந்து திண்டுக்கல் திரும்பிய மாணவர்- பெற்றோர் மகிழ்ச்சி