ETV Bharat / state

அறந்தாங்கியில் செங்கரும்புடன் ஊர்வலமாகச் சென்று நாம் தமிழர் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

author img

By

Published : Mar 18, 2021, 10:06 AM IST

செங்கரும்புடன் ஊர்வலமாகச் சென்று நாம் தமிழர் வேட்பாளர் வேட்பு மனு
செங்கரும்புடன் ஊர்வலமாகச் சென்று நாம் தமிழர் வேட்பாளர் வேட்பு மனு

புதுக்கோட்டை: செங்கரும்புடன் ஊர்வலமாகச் சென்று நாம் தமிழர் வேட்பாளர் ஹீமாயூன் கபீர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஹீமாயூன் கபீர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, வேட்பாளர் ஹீமாயூன் கபீர், நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் 500க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று அறந்தாங்கியின் முக்கிய வீதிகளில் வாக்கு சேகரித்தார். கைகளில் செங்கரும்பை ஏந்தியபடி இந்த ஊர்வலம் நடந்தது.

செங்கரும்புடன் ஊர்வலமாகச் சென்று நாம் தமிழர் வேட்பாளர் வேட்பு மனு

இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹீமாயூன் கபீர், அறந்தாங்கி சார் ஆட்சியர் அலுவலகத்தில் உதவி ஆட்சியர் ஆனந்த்மோகனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதையும் படிங்க:செங்கரும்பு, மண்வெட்டியுடன் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் வேட்பாளர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.