ETV Bharat / state

எஸ்.பி.பி-க்கு நாடக நடிகர் சங்க கலைஞர்கள் அஞ்சலி!

author img

By

Published : Sep 26, 2020, 8:04 PM IST

நாடக நடிகர் சங்க கலைஞர்கள் அஞ்சலி
நாடக நடிகர் சங்க கலைஞர்கள் அஞ்சலி

மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் மறைவிற்கு நாடக நடிகர் சங்க கலைஞர்கள், அவரின் பாடல்களை பாடி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

புதுக்கோட்டை: பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் மறைவிற்கு, நாடக, நடிகர் சங்க கலைஞர்கள் எஸ்பிபியின் பாடல்களை பாடி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, அவரின் திருவுருவப் படத்திற்கு நாடக, நடிகர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

நாடக நடிகர் சங்க கலைஞர்கள் அஞ்சலி

இதேபோன்று புதுக்கோட்டை மாவட்ட மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கத்தினர் ஏராளமானோர் கருப்பு பேட்ஜ் அணிந்து, அண்ணாசிலை அருகில் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி பாடல்கள் பாடியும் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: பாடும் நிலா பாலுவின் உடல் நல்லடக்கம்: ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.