ETV Bharat / state

மினி லாரி கவிழ்ந்து விபத்து - வீடு திரும்பிய பணியாளர்களுக்கு நேர்ந்த சோகம்!

author img

By

Published : Sep 20, 2019, 7:14 PM IST

வேன் கவிழ்ந்து விபத்து

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே மேற்பனைக்காடு மேற்குப் பகுதியில் தேசிய ஊரக வேலை திட்டப் பணியாளர்கள் வேலை முடிந்து வீடு திரும்பும் போது, மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்பனைக்காடு கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி செய்ய 5 கி.மீ., தொலைவில் மேற்குப் பகுதியில் வேலையை ஒதுக்கியுள்ளனர். இந்நிலையில் வேலை முடிந்து மினி லாரி மூலமாக 20க்கும் மேற்பட்டோர் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, வளைவு ஒன்றில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து குப்புறக் கவிழ்ந்தது.

இதில் சகுந்தலா, ஞானசுந்தரி, தேவிகா, தேவி, ராஜேஸ்வரி உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அவசர ஊர்தி மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வேலை முடிந்து மண்வெட்டிகளுடன் வேனில் அனைவரும் இருந்ததால் மண்வெட்டி கிழித்து பெரும்பாலானோருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

வேன் கவிழ்ந்து விபத்து

இதில் 4 பேருக்குக் காயம் அதிகம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:

மதுபோதையில் உறங்கி கொண்டிருந்த நபர் மீது கார் ஏறி விபத்து!

Intro:Body:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்பனைக்காடு மேற்கு பகுதியில் தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் வேலை முடிந்து வீடு திரும்பும் போது வேன் கவிழ்ந்து 10 பேர் காயங்களுடன் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதி .


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்பனைக்காடு கிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி செய்யும் ஊழியர்களுக்கு மேற்பனைக்காடு கிழக்கில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு பகுதிக்கு வேலையை ஒதுக்கி உள்ளனர். இந்நிலையில் காலையில் வேலை செய்துவிட்டு 5 கிலோமீட்டர் தொலைவு வீட்டிற்கு திரும்பி வரவேண்டும் என்பதால் ,மினி லாரி மூலமாக 20க்கும் மேற்பட்டோர் திரும்பிக்கொண்டிருந்தபோது வளைவு ஒன்றில் வேன் கட்டுப்பாட்டை இழந்து குப்புற கவிழ்ந்தது .இதில் சகுந்தலா ,ஞானசுந்தரி ,தேவிகா , தேவி, ராஜேஸ்வரி உள்ளிட்ட 10 பேர் காயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். வேலை முடிந்து மண்வெட்டிகளுடன் வேனில் அனைவரும் இருந்ததால் மண்வெட்டி கிழித்து பெரும்பாலானோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேருக்கு அதிக காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேற்பனைக்காடு கிழக்கு பகுதியில் வேலை ஒதுக்கீடு செய்து இருந்தால் விபத்து நடந்து இருக்காது என்றும் இப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.