ETV Bharat / state

நகை கொள்ளை: மாட்டிக்கொள்ளாமல் இருக்க மிளகாய் பொடியை தூவிச்சென்ற திருடர்கள்...

author img

By

Published : Nov 5, 2022, 3:24 PM IST

மாட்டிக்கொள்ளாமல் இருக்க வீடு முழுவது மிளகாய் பொடியை தூவிச்சென்ற திருடர்கள்
மாட்டிக்கொள்ளாமல் இருக்க வீடு முழுவது மிளகாய் பொடியை தூவிச்சென்ற திருடர்கள்

புதுக்கோட்டை அருகே முறுக்கு வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து 17.5 சவரன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் பிடிபடாமல் இருக்க மிளகாய் பொடியை தூவிச் சென்றுள்ளனர்.

புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே உள்ள ராஜகோபால் நகரை சேர்ந்தவர் முருகேசன். முறுக்கு வியாபாரியான இவர் அவரது மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அவரது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். மேலும் மருத்துவமனையிலேயே தங்கி முருகேசன் அவரது மகளுக்கு சிகிச்சை பார்த்து வந்துள்ளார்.

இதனை அறிந்த மர்ம நபர்கள் முருகேசனின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கிருந்த பீரோவையும் உடைத்து அதிலிருந்து 17.5 சவரன் தங்க நகைகளையும், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துவிட்டு, பிடிபடாமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அருகே இருந்த முருகேசனின் உறவினர்கள் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு முருகேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.உடனடியாக ஊர் திரும்பிய முருகேசன், அவரது வீட்டுக்கு சென்று பார்க்கும் போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன், இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கந்தர்வகோட்டை காவல்துறையினர், கைரேகை நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடனும் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியைச் சுற்றியுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் குறித்து ஏதேனும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என்பதையும் சோதனை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பட்டாக்கத்தியால் சொமாட்டோ ஊழியரை தாக்கி பீட்சா, பர்கரை பறித்து சென்ற இளைஞர்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.