ETV Bharat / state

நிலப் பிரச்சனையில் இளைஞர் செய்த வெறிச்செயல் - முதியவருக்கு நேர்ந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 2:07 PM IST

youth killed a old man over a land issue
நிலப் பிரச்சனையில் முதியவரை கொலை செய்த இளைஞர்

பெரம்பலூர் அருகே நிலப் பிரச்சனையில் முதியவரின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, தப்பியோடியதாக இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மாதவி திடீர்குப்பம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். விவசாய தொழிலில் ஈடுபட்டு வரும் நாராயணனுக்கு வயது 80. இந்நிலையில் விவசாயி நாராயணன், வயலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பொழுது அருகே உள்ள நிலத்தின் உரிமையாளரான காமராஜ் என்பவர் மகன் ராமமூர்த்தியுடன் (வயது 24) நில பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

அப்போது பேச்சு வார்த்தை முற்றிய நிலையில், முதியவர் நாராயணன் கழுத்தை நெறித்து கொலை செய்தவிட்டு அந்த இடத்திலிருந்து ராமமூர்த்தி தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது. பின்னர் நாராயணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து வயலில் கிடந்து உள்ளார். அதனைத் தொடர்ந்து வயலுக்கு நாராயணனைத் தேடி வந்த நாராயணனின் மனைவி அழகம்மாள், இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

அவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார் இறந்த நிலையில் கிடந்த நாராயணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் முதியவர் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு இளைஞர் தப்பி ஓடியதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியால் போலீஸ் தற்கொலை முயற்சி.. வரதட்சணை கொடுமை என பெண் போலீஸ் புகார்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.