ETV Bharat / state

பெரம்பலூரில் சுட்டெரிக்கும் வெயில்!

author img

By

Published : Apr 11, 2019, 5:28 PM IST

பெரம்பலூரில் சுட்டெரிக்கும் வெயில்!

பெரம்பலூர்: அக்னி நட்சத்திரத்தில் அடிக்கும் வெயில் போன்று தற்போது வெயிலின் தாக்கம் இருப்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. மே மாதத்தில் அடிக்கும் அக்னி நட்சத்திர வெயில் போன்றே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் இருக்கிறது.

இதே போல் பெரம்பலூர் மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அளவுக்கு அதிகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு மாத காலமாகவே 100 டிகிரிக்கு அதிகமாக வெயிலின் தாக்கம் இருந்து வந்துள்ளது.

இதனால் நீர்நிலைகள் வறண்டு போவதோடு விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கடுமையான வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்காக தர்பூசணி, கரும்பு ஜூஸ், மோர் போன்ற நீர் சத்து மிக்க பொருட்களை உண்டு சமாளித்து வருகின்றனர்.

பெரம்பலூரில் சுட்டெரிக்கும் வெயில்!
Intro:அக்னி நட்சத்திரத்தைப் போன்று தாக்கும் கடுமையான வெயிலின் காரணமாக அவதியுற்று வீட்டிலேயே முடங்கும் பொதுமக்கள்


Body:தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது மே மாதத்தில் அடிக்கும் அக்னி நட்சத்திர வெயில் போன்றே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயில் அதிகமாக இருந்து வருகிறது வெயிலின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர் பெரம்பலூர் மாவட்டத்தை பொருத்தவரையில் வெயிலின் தாக்கம் அளவுக்கு அதிகமாக உயர்ந்து வருகிறது கடந்த ஒரு மாத காலமாகவே 100 ஒரு டிகிரிக்கு மேல் ஆகவே வெயிலின் தாக்கம் இருந்து வந்துள்ளது மேலும் பெரம்பலூர் மாவட்டம் வானம் பார்த்த பூமி வறட்சி மிகுந்த மாவட்டம் ஆகும் இந்த வெயிலின் தாக்கத்தினால் நீர்நிலைகள் வறண்டு போவதோடு மற்றும் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது காலை 7 மணிக்கே வெயில் அடிக்க துவங்குவதால் பணிக்கு செல்வோர் மற்றும் பள்ளிக்குச் செல்வோம் ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட பல தரப்பினர் முதியோர் மருத்துவமனைக்கு செல்வோம் இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து அவதியுற்று வருகின்றனர் மேலும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் அனல் காற்றும் செல்வது போல ஒரு சூழ்நிலை உருவாக உதவும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலைகளில் இந்த வெயிலின் தாக்கம் மூலம் கானல் நீர்போல காட்சியளிப்பதாக தெரிகிறது


Conclusion:கடுமையான வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்காக தர்பூசணி பல வகைகள் மற்றும் கரும்பு ஜூஸ் மோர் பல வகைகளை உண்டு வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபடவும் தேவையான நீர் சத்து மிக்க பல வகைகளை உண்டும் இருந்து வருகின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.