ETV Bharat / state

பட்டாக் கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்; 3 பேர் கைது

author img

By

Published : Jul 31, 2021, 10:16 PM IST

பிறந்தநாள் கொண்டாட்டம்
பிறந்தநாள் கொண்டாட்டம்

சாலையின் குறுக்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தி, மது அருந்தியபடி பட்டா கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 3 பேர் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

பெரம்பலூர்: கடந்த 30ஆம் தேதி இரவு வேப்பந்தட்டை பேருந்து நிலையத்தில், இளைஞர்கள் சிலர் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் குறுக்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தியுள்ளனர். பின்னர் மது அருந்தியபடி பட்டா கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர்.

இதனைக் கண்டு முகம் சுளித்த பொதுமக்கள், இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவலளித்தனர். பின்னர் காவல் கண்காணிப்பாளர் மணியின் உத்தரவின்பேரில், அரும்பாவூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறாக பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக ஹரிகிருஷ்ணன், ஜனார்த்தனன், சூர்யா ஆகிய மூன்று பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - மூவர் படுகாயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.