ETV Bharat / state

சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலி!

author img

By

Published : Jun 19, 2021, 6:10 AM IST

சாலை விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு
சாலை விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு

அரியலூர்: சாத்தமங்கலம் அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் வெற்றியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்துவந்தார். வெற்றியூர் கிராமத்தில் புதிதாகக் கட்டிவரும் வீட்டைப் பார்ப்பதற்காக மனைவி, இரண்டு மகள்கள், மூன்று பேரக்குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சாத்தமங்கலம் அருகே செல்லும்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திலேயே ராமமூர்த்தி, அவரது மகள் நாகவள்ளி ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர்.

தகவலறிந்த கீழப்பலூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்த ஆறு பேரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வழியிலேயே மற்றொரு மகளான நாகலட்சுமியும் உயிரிழந்தார். இது குறித்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: விருத்தாச்சலத்தில் 2 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.