ETV Bharat / state

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: பெரம்பலூரில் ஒருவர் கைது

author img

By

Published : Sep 16, 2019, 8:57 AM IST

ten thousand worth Cannabis seized in perambalur

பெரம்பலூர்: கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதாக எழுந்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதாக அடிக்கடி புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு சங்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த செங்கோட்டுவேல் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செங்கோட்டுவேல் பதுக்கிவைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோ கஞ்சா பொட்டலங்கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இந்தச் சம்பவத்தில் வேறு எவருடனும் தொடர்புள்ளதா என்ற கேணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Intro:பெரம்பலூர் நகரில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதாக எழுந்த புகாரில் ஒருவர் கைது . ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் போலீசார் விசார Body:பெரம்பலூர் நகரில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதாக புகார் வந்தது.
இதனிடையே சங்குப்பேட்டை பகுதியில் கஞ்சா பொட்டலங்களுடன் இருந்த சங்குப்பேட்டை பகுதியை சேர்ந்த செங்கோட்டு வேல் என்பவரை போலீசார் கைது செய்தனர் , மேலும் அவரிடமிருந்து ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள ஒன்றரை கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.Conclusion:மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.