ETV Bharat / state

ஓய்வு பெற்ற அரசு அலுவலர் வீட்டில் கொள்ளை

author img

By

Published : May 7, 2020, 9:21 PM IST

ஒய்வு பெற்ற அலுவலர் வீட்டில் கொள்ளை
ஒய்வு பெற்ற அலுவலர் வீட்டில் கொள்ளை

பெரம்பலூர்: ஒய்வு பெற்ற வேளாண் அலுவலர் வீட்டில் 21 பவுன் நகைகள், நான்கு செல்ஃபோன்கள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

பெரம்பலூர் நான்கு ரோடு மின்சார வாரியம் அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ள ரெங்கம்மாள் நகரில் வசித்து வருபவர் ஒய்வு பெற்ற வேளாண் அலுவலர் வாசுதேவன். இவர் நேற்று (மே 6) இரவு தனது வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.

அந்நேரம் வீட்டின் கீழ் பகுதியில் யாரும் இல்லாததால் அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து வீட்டின் பீரோவில் வைத்திருந்த நெக்லஸ், செயின், மோதிரம், வளையல் உள்ளிட்ட 21 பவுன் தங்க நகைகள், நான்கு செல்ஃபோன்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

ஒய்வு பெற்ற அலுவலர் வீட்டில் கொள்ளை

பின்னர் காலை விடிந்தவுடன் வாசுதேவன் கீழ் பகுதிக்கு வந்து பார்த்தபோது திருடுபோயிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெரம்பலூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை நிவாரண நிதியாக அளித்த சிறுவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.