75ஆவது சுதந்திர தினம் - மூவர்ண விளக்குகளால் மின்னும் ரஞ்சன்குடி கோட்டை

author img

By

Published : Aug 6, 2022, 4:20 PM IST

Etv Bharat மூவர்ண விளக்குகளால் மின்னும் ரஞ்சன்குடி கோட்டை

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஞ்சன்குடி கோட்டை மூவர்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.

பெரம்பலூர்: வேப்பந்தட்டை வட்டம் ரஞ்சன்குடி பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சன்குடி கோட்டை அமைந்துள்ளது. இங்கே நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில் அதனை எடுத்துரைக்கும் வகையில், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம், ரஞ்சன்குடி கோட்டை சுவற்றில் வண்ண மின்விளக்குகள் மூலம் மூவர்ண ஒளியினால் தேசிய கொடியை பிரதிபலிப்பது போன்று லேசர் மின்விளக்குகள் மூலம் எரிய செய்கிறது.

இவை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இங்குள்ள பொதுமக்கள் இரவு நேரத்தில் ஆச்சரியத்துடன் இதனைக் கண்டு புகைப்படம் எடுத்துக் செல்கின்றனர். ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இந்த மின்விளக்கு தொடர்ந்து பிரதிபலித்து வரும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ’மகளிர் இலவச பேருந்து’- பெண்கள் எளிதில் அடையாளம் காண பிங்க் நிற பேருந்துகள் இயக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.