ETV Bharat / state

போராட்டத்தைத் தடுப்பதற்கான காவல் துறை ஒத்திகை!

author img

By

Published : Jan 28, 2021, 3:47 PM IST

போராட்டம்
போராட்டம்

பெரம்பலூர்: முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களைத் தடுப்பது குறித்து காவல் துறை சார்பில் ஒத்திகை நடைபெற்றது.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பாலக்கரை பகுதியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையின் ஒத்திகை நிகழ்வு மாவட்ட காவல் துறை சார்பில் நடைபெற்றது.

இதில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களைத் தடுப்பதற்காக பேரிகார்டு அமைத்து கலவர தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காவல் துறையின் அணிவகுப்பு நடைபெற்றது. பாலக்கரை பகுதியில் தொடங்கி அணிவகுப்பு புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

பெரம்பலுார்
அணிவகுத்துச் செல்லும் காவல் துறையினர்

இந்த நிகழ்வில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், காவல் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: மாஸ்டர் விஜய் படமா? விஜய் சேதுபதி படமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.