ETV Bharat / state

ஏடிஎம் கார்டை மாற்றி ரூ.30ஆயிரம் கொள்ளை - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை

author img

By

Published : Jan 9, 2020, 1:26 PM IST

ஏடிஎம் கார்டை மாற்றி செல்லும் நபரின் சிசிடிவி காட்சி
ஏடிஎம் கார்டை மாற்றி செல்லும் நபரின் சிசிடிவி காட்சி

பெரம்பலூர்: பணம் எடுக்கவந்த நபரிடம் நூதன முறையில் ஏடிஎம் கார்டை மாற்றி ரூ.30ஆயிரம் எடுத்துச் சென்றவரை சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே உள்ள புது நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர், கிருஷ்ணாபுரம் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தனது மருமகன் பாலமுருகனிடம் பணம் எடுத்து வரச்சொல்லி அவரது ஏடிஎம் கார்டை கொடுத்து அனுப்பியுள்ளார்.

ஆத்தூர் சாலையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம்-ல் பணம் எடுக்கச் சென்ற பாலமுருகன், வரிசையில் தனது பின்னால் நின்ற நபரிடம் பணம் எடுக்க உதவுமாறு கேட்டுள்ளார். பின்னர், அவரிடம் ஏடிஎம் கார்டை பெற்றுக்கொண்ட அடையாளம் தெரியாத நபர், பாலமுருகனின் கவனத்தை திசை திருப்பி தான் கொண்டுவந்த போலி ஏடிஎம் கார்டை கொடுத்துள்ளார்.

ஏடிஎம் கார்டை மாற்றி செல்லும் நபரின் சிசிடிவி காட்சி

பின்னர் பாலமுருகனின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 30 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளர். தனது வங்கிகணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதை அறிந்த மின்வாரிய ஊழியர் பாலகிருஷ்ணன் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பணத்தை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபரை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: உசாரய்யா... உசாரு... ஏடிஎம் கார்டை திருடி 1.35 லட்சம் ரூபாய் அபேஸ் செய்த பெண்!

Intro:
பெரம்பலூரில் SBI ATM ல் பணம் எடுக்க வந்த மின் வாரிய ஊழியரிடம் ATM கார்டை மாற்றி கொடுத்து நூதன முறையில் 30 ஆயிரம் மோசடி.சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை
Body:
பெரம்பலூர் அருகே உள்ள புது நடு வலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்
இவர் பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் தனது மருமகன் பாலமுருகனிடம் பணம் எடுத்து வரச் சொல்லி ATM கார்டு கொடுத்து அனுப்பி உள்ளார்.
பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள SBl வங்கி ATM ல் பணம் எடுக்கச் சென்ற பாலமுருகன் ATM வரிசையில் தனது பின்னால் நின்ற நபரிடம் பணம் எடுக்க உதவுமாறு கேட்டுள்ளார்
அந்த மர்ம நபர் ATM கார்டை பெற்றுக் கொண்டு அவரது கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் மோசடி செய்வதற்காக அவரிடம் உள்ள ATM கார்டை பெற்றுக் கொண்டு மர்ம நபர் வைத்திருந்த போலி கார்டை பால முருகனிடம் கொடுத்துள்ளார்.
மேலும் பாலமுருகன் கொண்டு வந்த ATM மூலம் ரூ 30,000 பணம் நூதன முறையில் பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளர்.
மேலும் தனது வங்கிகணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதை அறிந்த
மின்வாரிய ஊழியரான பாலகிருஷ்ணன் பெரம்பலூர் காவல் நிலைwத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை கைப் Uற்றி பணத்தை எடுத்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்Conclusion:இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.