ETV Bharat / state

ஆசிரியர்கள் பணிக்காலத்தில் இறந்தால் குடும்பத்தாருக்கு ரூ.25 ஆயிரம்!

author img

By

Published : Apr 25, 2019, 8:03 PM IST

விழுப்புரம்: பணிக்காலத்தில் மரணமடையும் ஆசிரியர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 ஆயிரம் நிதி வழங்குவது என்று விழுப்புரத்தில் நடைபெற்ற அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இரண்டு நாள் மாநில பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டச் செயலாளர் இரா.குமார் வரவேற்றார். இதில், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ரங்கராஜன் தலைமையில் 16 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு, அவை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினர்கள் பணிக்காலத்தில் மரணமடைந்தால், அவர்களது சேவையை நினைவூட்டும் விதமாக அவருடைய குடும்பத்தாருக்கு வட்டார அல்லது மாவட்ட அமைப்புகளின் பரிந்துரையின் அடிப்படையில் இயக்கச் சார்பான குடும்ப நல நிதியாக ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக உயர் நீதிமன்றத்தில் மாநில அமைப்பு வழக்கு தொடர வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் ஆசிரியர்களுக்கும் சட்ட ரீதியாக பணிப்பாதுகாப்பு வழங்கிட தனிச்சட்டம் இயற்ற வேண்டும். அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் நீண்ட கால இலக்குகளை அடைய மாநில அளவில் மாபெரும் மாநாடு நடத்த வேண்டும். அதைத் தொடர்ந்து சென்னையில் 9 ஆவது மாநில மாநாட்டை நடத்த வேண்டும் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில், மாநில பொருளாளர் கதிரவன் நன்றி கூறினார்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
Intro:விழுப்புரம்: பணி காலத்தில் மரணமடையும் உறுப்பினர்களின் குடும்பத்தாருக்கு ரூ.25 ஆயிரம் நிதி வழங்குவது என விழுப்புரத்தில் நடைபெற்ற அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


Body:தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இரண்டு நாள் மாநில பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது .

இந்த பொதுக்குழுவில் அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ந.ரங்கராஜன் தலைமையில் 16 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு அவை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்.,

1) அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினர்கள் பணிக்காலத்தில் மரணமடைந்தால், அவர்களது சேவையை நினைவூட்டும் விதமாக அவருடைய குடும்பத்தாருக்கு வட்டார/மாவட்ட அமைப்புகளின் பரிந்துரை அடிப்படையில் இயக்கச் சார்பான குடும்ப நல நிதியாக ரூ. 25 ஆயிரம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

2) ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்காக உயர் நீதிமன்றத்தில் மாநில அமைப்பு வழக்கு தொடர அனுமதித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3) மத்திய-மாநில அரசுகள் ஆசிரியர்களுக்கும் சட்ட ரீதியாக பணி பாதுகாப்பு வழங்கிட தனி சட்டம் இயற்ற வேண்டும்.

4) அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் நீண்ட கால இலக்குகளை அடைய மாநில அளவில் மாபெரும் மாநாடு நடத்த வேண்டும் என்றும், அதைத் தொடர்ந்து சென்னையில் 9 ஆவது மாநில மாநாட்டை நடத்தவும் மாநிலச் செயற்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5) மேலும் இயக்க விரோத செயல்களில் ஈடுபட்டும் மாற்று அமைப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அகஸ்டின், தெய்வீகன், ஜெகவீரபாண்டியன், அய்யனார், குருபரன், சக்திவேல் ஆகிய 6 நபர்களையும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குதல் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் செயற்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


Conclusion:பொதுக்குழுவுக்கு வந்திருந்த அனைவரையும் விழுப்புரம் மாவட்ட செயலாளர் இரா.குமார் வரவேற்றார். மாநில பொருளாளர் கதிரவன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள், துணை பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழு பொதுக்குழுவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.