ETV Bharat / state

புளியமரத்தில் மோதி கார் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

author img

By

Published : Jan 26, 2021, 12:18 AM IST

புளியமரத்தில் மோதிய காரில் தீ விபத்து
புளியமரத்தில் மோதிய காரில் தீ விபத்து

பெரம்பலூர்: பாடாலூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த தனது மாமனார் ரெங்கராஜ் (70) என்பவரை அழைத்துக் கொண்டு, தனது காரில் பெரம்பலூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் அருகே சென்ற போது எதிர்பாரத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கு நின்று கொண்டிருந்த புளியமரத்தில் மோதியது.

இந்த விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததில் ரெங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனந்த் படுகாயங்களுடன் அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புதுறை வீரர்கள் தீயை அணைத்தனர். இதையடுத்து, படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஆனந்தை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் சம்பவ இடத்தில் வந்த பாடாலூர் காவல் துறையினர், உயிரிழந்த ரெங்கராஜின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: விமான விபத்து: கால்பந்து வீரர்கள் ஐந்து பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.