நாளை முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் 144 தடை - ஏன் தெரியுமா?

author img

By

Published : Aug 3, 2021, 4:57 PM IST

நாளை முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் 144 தடை

நாளை முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பெரம்பலூர் நகராட்சியில் வணிக நிறுவனங்கள் செயல்படும் 7 பகுதிகளில் நாளை முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 144 தடை விதிக்கப்படுவதாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரிக்காமல் இருப்பதற்காகவும், தீவிர நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி, அரும்பாவூர் பேரூராட்சி, லப்பைக்குடிகாடு பேரூராட்சி ஆகிய 7 பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டும், குற்றவியல் நடைமுறைச்சட்டம் 1973 பிரிவு 144இன் கீழ் நாளை ( ஆகஸ்ட் 4) காலை 6 மணி முதல் 10ஆம் தேதி மாலை 6 மணி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா அதிரடியாக பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரை நிரப்பும் அதிசய பங்க்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.