ETV Bharat / state

15 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்!

author img

By

Published : Nov 2, 2019, 11:46 PM IST

நாமக்கல்: பெங்களூரிலிருந்து மதுரைக்கு செல்லும் லாரியில், காய்கறி பெட்டிகளுக்கு நடுவே கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை நாமக்கல் அருகே காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

15 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

பெங்களூரிலிருந்து நாமக்கல் வழியாக மதுரைக்கு காய்கறி பெட்டிகளுடன் வந்த லாரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து நல்லிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதா தலைமையில், காவல் துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முதலைப்பட்டி மேம்பாலத்தின் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரை நோக்கிச் சென்ற லாரியை சோதனை செய்த போது காய்கறிகளை நிரப்பிச் செல்லும் பெட்டிகளில் காய்கறிகள் ஏதுமில்லாமல் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்தனர். பின்னர் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர், பெட்டிகளுக்கு நடுவே மூட்டை, மூட்டையாகத் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

புகையிலை பொருட்கள் பறிமுதல்

பின்பு லாரியை ஓட்டி வந்த டிரைவர்கள் சந்தோஷ்குமார், விஜயகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தது மட்டுமல்லாமல் 10,755 ஹான்ஸ் பொட்டலங்கள், 2507 புகையிலை பொருட்கள் என 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களையும், லாரியையும் நல்லிபாளையம் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

அதன்பின் கைது செய்யப்பட்ட இருவரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், பெங்களூரிலிருந்து வந்த லாரியை தொப்பூர் வரை ஒரு ஓட்டுநரும், தொப்பூரிலிருந்து மதுரை வரை இந்த இரண்டு ஓட்டுநர்களும் லாரியை ஓட்டியது தெரியவந்தது. தற்போது அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:பெங்களூரில் இருந்து மதுரைக்கு லாரியில் காய்கறிக்கு பெட்டிகளுக்கு நடுவே கடத்தில் செல்லப்பட்ட 5 இலட்ச மதிப்பிலான புகையிலை பொருட்கள் நாமக்கல் அருகே பறிமுதல், ஓட்டுனர் இருவரை கைது செய்து நல்லிபாளையம் போலீசார் நடவடிக்கைBody:பெங்களூரில் இருந்து நாமக்கல் வழியாக மதுரைக்கு காய்கறி பெட்டிகளுடன் செல்லும் லாரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நல்லிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதா தலைமையில் காவல் துறையினர் நாமக்கல் புறவழிச் சாலை தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டி மேம்பாலத்தின் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சேலத்திலிருந்து மதுரை நோக்கி சென்ற TN-30 BS 2783 என்ற எண் கொண்ட லாரியை சோதனை செய்த போது காய்கறிகளை நிரப்பி செல்லும் பெட்டிகளில் காய்கறிகள் ஏதுமில்லாமல் இருந்த நிலையில் அந்த லாரியை போலீசார் முழுவதுமாக சோதனை செய்த போது காலி கிரேடு பெட்டிகளுக்கு நடுவே மூட்டை, மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து லாரியை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த லாரி டிரைவர்கள் சந்தோஷ்குமார் மற்ரும் விஜயகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து லாரியில் இருந்த 10755 ஹான்ஸ் பாக்கெட்டுகள், 2507 புகையிலை பொருட்கள் என 5 இலட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களையும் லாரியையும் நல்லிபாளையம் போலீசார் பறிமுதல் செய்தனர். பெங்களூரில் இருந்த வந்த லாரியை தொப்பூர் வரை ஒரு டிரைவரும், தொப்பூரில் இருந்து மதுரைக்கு இந்த இரு ஓட்டுனர்களும் ஓட்டி வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இவை எங்கு யாருக்கு எடுத்து செல்வது என்பது குறித்தும் எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.