நீட் தேர்வு எழுதிய மாணவி மாயம்

author img

By

Published : Sep 20, 2021, 7:20 PM IST

neet exam aspirant missing in namakkal

நாமக்கல் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவியை காணமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சின்னஅரியாகவுண்டன்பட்டியை சேர்ந்த செந்தில்பாண்டியன் (40) என்பவரது மகள் சுவேதா (17). இவர் கடந்த 12ஆம் தேதி நீட் தேர்வு எழுதினார்.

இதையடுத்து அடுத்த நாளே காணாமல் போனார். இதனால் பெற்றோர் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் மாணவியை தேடிவருகின்றனர்.

நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் பலர் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துவரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: குமரியில் கல்லூரி மாணவி மாயம் - காவல்துறை விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.