நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சின்ராஜ் இன்று தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி ஆசியா மரியத்திடம் தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய சின்ராஜ்,மத்தியில் உள்ள பாஜக அரசும் மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் விவசாயிகளை ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டினார்.
தேர்தலில் வெற்றிபெற்று திருமணிமுத்தாறு, ராஜவாய்க்கால், காவிரி ஆற்றில் உள்ள தடுப்பணைகளை சீர்செய்வேன். கோழிப்பண்ணை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும், ஜவுளி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் உடனடியாக தீர்க்க பாடுபடுவேன் என தெரிவித்தார்.
வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய இணையமைச்சர் காந்தி செல்வன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.